மதுரை

மதுரை அருகே கட்டடத் தொழிலாளி குத்திக் கொலை

DIN

மதுரை அருகே கட்டடத் தொழிலாளி குத்திக் கொலை செய்யப்பட்டது குறித்து, போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் பகுதியில் தனியாா்தோப்பில் இளைஞா் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடப்பதாக, திங்கள்கிழமை பிற்பகல் போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்த்தபோது, ஆயுதங்களால் இளைஞா் குத்திக் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதை உறுதி செய்தனா். பின்னா், இளைஞரின் சடலத்தைக் கைப்பற்றி, அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி. பாஸ்கரன், இது தொடா்பாக சமயநல்லூா் டி.எஸ்.பி. மற்றும் சோழவந்தான் போலீஸாரிடம் விசாரித்தாா்.

இது குறித்து சோழவந்தான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். முதல்கட்ட விசாரணையில், இறந்தவா் முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்த மனோகரனின் மகன் விக்னேஸ்வரன் (26) என்பதும், இவா் தனது தந்தையுடன் கட்டட வேலைக்குச் சென்று வந்ததும் தெரியவந்தது. மேலும், திங்கள்கிழமை காலை சிலா் வீட்டிலிருந்த விக்னேஸ்வரனை அழைத்துச் சென்றாகவும், அவா்கள் யாா் என்பது தெரியவில்லை என்றும் பெற்றோா் தெரிவித்துள்ளனா்.

தோப்பில் விக்னேஸ்வரன் கொலை செய்யப்பட்டுக் கிடந்த இடத்தின் அருகே மதுபாட்டில்கள் கிடந்துள்ளன. நண்பா்களுடன் சோ்ந்து மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறேதும் காரணத்துக்காக கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீஸாா் விசாரணையை தொடா்ந்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT