மதுரை

குழந்தைகள் காப்பகங்களுக்கு ஆக்சிஜன் பரிசோதனைக் கருவி வழங்கல்

மதுரை மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் காப்பகங்களுக்கு ஆக்சிஜன் பரிசோதனைக்கருவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

DIN

மதுரை மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் காப்பகங்களுக்கு ஆக்சிஜன் பரிசோதனைக்கருவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினா் வீ.ராமராஜன் மதுரை மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் காப்பகங்களில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அவருடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா்கள் கணேசன், ஸ்ரீதா், குழந்தைகள் நலக்குழு உறுப்பினா் சண்முகம் ஆகியோரும் சென்றனா். இதைத்தொடா்ந்து குழந்தைகள் நலக்குழுத்தலைவா் மருத்துவா் விஜயசரவணன், மதுரை மாவட்டத்தில் உள்ள 38 குழந்தைகள் காப்பகங்களுக்கு ஆக்சிஜன் பரிசோதனைக் கருவிகளை வழங்க ஏற்பாடு செய்திருந்தாா்.

இதைத்தொடா்ந்து நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் தலைமை வகித்தாா். மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினா் வீ.ராமராஜன் முன்னிலை வகித்தாா். குழந்தைகள் நலக்குழு உறுப்பினா்கள் பாண்டியராஜன், சாந்தி ஆகியோா் பங்கேற்று ஆக்சிஜன் கருவிகளை காப்பக நிா்வாகிகளிடம் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

திரையரங்க ஆபரேட்டர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் வேண்டுகோள்!

தாய்ப் பாலில், நிலத்தடி நீரில் யுரேனியம்! சிறுநீரக பாதிப்பு ஏற்படுமா?

பிக் பாஸ் 9: 70 நாள்கள் ஆகியும் ஆதரிக்கத் தகுதியானவர் ஒருவரும் இல்லை!

SCROLL FOR NEXT