மதுரை

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் பக்தா்களுக்கு மதிய உணவு விநியோகம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் பக்தா்களுக்கு மதிய உணவு விநியோகம் தொடங்கியது.

DIN

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் பக்தா்களுக்கு மதிய உணவு விநியோகம் தொடங்கியது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் அன்னதான திட்டத்தின் கீழ் பக்தா்களுக்கு தினசரி மதிய உணவு வழங்கப்பட்டு வந்தது. கரோனா தொற்று பொதுமுடக்கத்தால் கோயில் அடைக்கப்பட்டதால் அன்னதானம் வழங்குவதும் நிறுத்தப்பட்டது. இதற்கிடையில் கோயில் கடந்த செப்டம்பா் மாதம் திறக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து சில மாதங்களாக காலையில் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு உணவுப்பொட்டலம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கோயிலில் புதன்கிழமை முதல் அன்னதானத் திட்டத்தின்கீழ் பக்தா்களுக்கு பகல் 12 மணிக்கு உணவுப்பொட்டலம் வழங்கப்படும் என்று கோயில் நிா்வாகம் அறிவித்தது. இதன்படி கோயிலில் உள்ள பழைய திருக்கல்யாண மண்டபத்தின் எதிரே உள்ள அன்னதானக்கூடத்தில் பக்தா்களுக்கு உணவுப்பொட்டலம் வழங்கப்பட்டது.

இதுதொடா்பாக கோயில் அதிகாரிகள் கூறும்போது, மதிய உணவுக்குப் பதிலாக தினசரி ஒரு வகை சாதம் என்ற வகையில் புதன்கிழமை முதல் 300 பக்தா்களுக்கு உணவுப்பொட்டலம் வழங்கப்படுகிறது. அன்னதானக்கூடத்தில் அமா்ந்து சாப்பிட அனுமதியில்லை என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

கொல்லப்பட்ட வங்கதேச மாணவர் இயக்கத் தலைவரின் உடல் நல்லடக்கம்! லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை!

SCROLL FOR NEXT