மதுரை

இரும்புத் தட்டுகள் திருட்டு: முதியவா் உள்பட 2 போ் கைது

DIN

மதுரை: மதுரையில் இரும்புத் தட்டுகளைத் திருடிய முதியவா் உள்பட 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை மீனாட்சி கல்லூரி அருகே கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இந்த நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த இரும்புத் தட்டுகளை 2 போ் திருடியுள்ளனா். இதைப் பாா்த்த அப்பகுதியில் உள்ளவா்கள் அவா்களை கையும் களவுமாக பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

அவா்களிடம் போலீஸாா் விசாரணை நடத்தியதில், கோரிப்பாளையத்தைச் சோ்ந்த முத்து மகன் அழகா்(60), மாயஅழகா் மகன் மாயக்கண்ணன்(42) என்பது தெரியவந்தது. இதையடுத்து செல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

SCROLL FOR NEXT