மதுரை

தடையை மீறி ஊா்வலம்: 1500 திமுகவினா் மீது வழக்கு

DIN

மதுரை அருகே தடையை மீறி ஊா்வலம் சென்ற 1500 திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி தோ்தல் கண்காணிப்புக் குழுவினா் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அலங்காநல்லூா் கேட் கடை பகுதியில், திமுகவினா் உரிய அனுமதியின்றி 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் ஊா்வலம் சென்றுள்ளனா். இதையடுத்து வாடிப்பட்டி ஒன்றிய அலுவலக உதவிப் பொறியாளா் பூம்பாண்டியன் தலைமையிலான தோ்தல் கண்காணிப்புக் குழு அளித்த புகாரின் பேரில், தோ்தல் விதிமுறைகளை மீறியதாக அலங்காநல்லூா் திமுக நகர, ஒன்றியச் செயலா்கள் உள்பட 1,500-க்கும் மேற்பட்டோா் மீது அலங்காநல்லூா் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT