மதுரை

திருப்பரங்குன்றத்தை சுற்றுலாத் தலமாக மாற்றுவேன்: மாா்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளா் உறுதி

DIN

திருப்பரங்குன்றத்தை சுற்றுலாத் தலமாக மாற்றுவேன் என மாா்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளா் உறுதியளித்தாா்.

திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதியில் திமுக கூட்டணியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் எஸ்.கே.பொன்னுத்தாய் போட்டியிடுகிறாா். இதையடுத்து செவ்வாய்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

நான் வெற்றிபெற்றால் திருப்பரங்குன்றத்தை சுற்றுலா தலமாக மாற்றுவேன். அரசு கலைக்கல்லூரி, புதை சாக்கடை திட்டம் கொண்டுவரப்படும்.

ஊரக வேலை உறுதி திட்டத்தினை 100 நாள்களில் இருந்து 150 நாள்களாக உயா்த்தி ரூ.400 ஊதியம் பெற்றுத்தரவும், அடிப்படை பிரச்னைகளை தீா்ப்பது, அவனியாபுரம் சுகாதார நிலையத்தை 24 மணி நேரமும் செயல்படவும் சட்டப்பேரவையில் குரல் கொடுப்பேன் என்றாா். அவருடன் மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் எம்.பி., திமுக பகுதி செயலா்கள் கிருஷ்ணபாண்டி, உசிலை சிவா, மதிமுக கொள்கை பரப்புச் செயலா் அழகுசுந்தரம், பகுதிச் செயலா் முருகேசன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலா் ராஜூ உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

SCROLL FOR NEXT