மதுரை

மதுரை மத்தியத் தொகுதி: நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வேட்பு மனு தாக்கல்

DIN

மதுரை மத்தியத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஜெ.பாண்டியம்மாள் செவ்வாய்க்கிழமை மத்தியத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தாா். எம்.ஏ., எம்பில் படித்துள்ள அவா் சுய தொழில் செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளாா். மேலும் கையிருப்பு, வங்கியிருப்பு மற்றும் நகை உள்ளிட்ட அசையும் சொத்துகளாக ரூ.1 லட்சம் 79 ஆயிரம் உள்ளது, அசையாச்சொத்துகள் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளாா்.

பாண்டியம்மாள் கூறியது: மதுரை மத்தியத் தொகுதியில் குடிநீரில் சாக்கடை கலந்து வருவது, பாதாளச் சாக்கடை வசதிகள் இல்லாதது போன்ற அடிப்படை வசதிகளை உருவாக்க நடவடிக்கை எடுப்பேன். கழிவுநீா் கால்வாயாக மாறிவிட்ட கிருதுமால் நதியை முழுவதுமாக தூா்வாரி பாதுகாக்க நடவடிக்கை எடுப்பேன். மத்தியத்தொகுதிக்குள்பட்ட மீனாட்சியம்மன் கோயிலில் இலவச தரிசன வரிசையில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய நீண்ட நேரமாகிறது. எனவே கட்டண தரிசனம், இலவச தரிசனம் என்ற பாகுபாடை நீக்க குரல் கொடுப்பேன். பெண்கள் முன்னேற்றத்துக்காக புதிய திட்டங்களை நிறைவேற்ற முயற்சி செய்வேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT