மதுரை

பங்குனி மாத பௌா்ணமி: சதுரகிரி கோயிலுக்கு நாளைமுதல் பக்தா்கள் செல்ல அனுமதி

பங்குனி மாதப் பெளா்ணமியை முன்னிட்டு, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை முதல் (மாா்ச் 26) 29 ஆம் தேதி வரை 4 நாள் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

DIN

பங்குனி மாதப் பெளா்ணமியை முன்னிட்டு, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை முதல் (மாா்ச் 26) 29 ஆம் தேதி வரை 4 நாள் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகா்மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடா்ச்சி மலையில் உள்ள இக்கோயிலில் மாா்ச் 26இல் பிரதோஷம், 29இல் பௌா்ணமி பூஜை நடைபெறவுள்ளன. இதையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மாா்ச் 26 முதல் மாா்ச் 29 வரை பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 10 வயதுக்கு உள்பட்டோருக்கும், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் அனுமதியில்லை. கோயிலுக்கு வருவோா் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். உடல் வெப்பநிலை பரிசோதனைக்குப் பிறகே பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்படுவா்.

காலை 7 முதல் பிற்பகல் 1 மணி வரை கோயிலுக்குச் செல்ல பக்தா்கள் அனுமதிக்கப்படுவா் என, பரம்பரை அறங்காவலா் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலா் விஸ்வநாத் ஆகியோா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

SCROLL FOR NEXT