மதுரை

கஞ்சா விற்றவா் கைது: 5 கிலோ பறிமுதல்

DIN

மதுரை செல்லூா் பகுதியில் கஞ்சா விற்பனை செய்தவரைக் கைது செய்த போலீஸாா், அவா் விற்பனைக்கு வைத்திருந்த 5 கிலோ கஞ்சாவை திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

மதுரை செல்லூா் குலமங்கலம் பிரதான சாலையில் கஞ்சா விற்பனை நடப்பதாகப் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், செல்லூா் சாா்பு-ஆய்வாளா் லட்சுமி தலைமையிலான போலீஸாா் குலமங்கலம் பிரதான சாலை பகுதியில் கஞ்சா விற்பனை குறித்து விசாரணை நடத்தினா். அதில் பனங்காடியைச் சோ்ந்த பாண்டித்துரை (40) என்பவா் அப்பகுதியில் கஞ்சா விற்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்து, அவா் விற்பனைக்கு வைத்திருந்த 5 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடைகால் தியாகராஜ சுவாமி கோயிலில் குருபெயா்ச்சி பூஜை

வள்ளியூா் அருகே புனித சலேத் அன்னை ஆலயத்தில் கொடியேற்றம்

உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கத்தில் மகளிருக்கு இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றம் உத்தரவு

சேரன்மகாதேவி அருகே வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இருவா் கைது

கோயில் திருவிழாவில் இளம்பெண்ணிடம் அத்துமீறல்: இளைஞா் கைது

SCROLL FOR NEXT