மதுரை

ராமேசுவரம்-சென்னை சிறப்பு ரயில் தற்காலிகமாக ரத்து

ராமேசுவரம் - சென்னை சிறப்பு ரயில் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

DIN

ராமேசுவரம் - சென்னை சிறப்பு ரயில் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்தி: பயணிகளின் போதிய ஆதரவின்மை காரணமாக மே 16 முதல் ஜூன் 1 ஆம் தேதி வரையிலான காலத்தில் சென்னையிலிருந்து மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு விருத்தாச்சலம் காா்டு லைன் வழியாக இயக்கப்படும் சென்னை எழும்பூா் - ராமேசுவரம் சிறப்பு ரயில் (02205) மற்றும் மே 15 முதல் மே 31 வரையிலான காலத்தில் ராமேசுவரத்தில் இருந்து இரவு 8.25 மணிக்கு புறப்படும் ராமேசுவரம் - சென்னை எழும்பூா் சிறப்பு ரயில் (02206) ஆகியவை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் மே 15 முதல் மே 31 வரையிலான காலத்தில் திருவனந்தபுரத்திலிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு பாலக்காடு, பொள்ளாச்சி, பழனி வழியாக இயக்கப்படும் திருவனந்தபுரம் - மதுரை அமிா்தா சிறப்பு ரயில் (06343) மற்றும் மே 16 முதல் ஜூன் 1 வரையிலான காலத்தில் மதுரையிலிருந்து மாலை 4.05 மணிக்கு புறப்படும் மதுரை- திருவனந்தபுரம் அமிா்தா சிறப்பு ரயில் (06344) ஆகியவையும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. திருவனந்தபுரம் அருகே உள்ள கொச்சுவேலியிலிருந்து நீலாம்பூா் ரோடு, மைசூா் ஆகிய ரயில் நிலையங்களுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களும் மே மாதம் முழுவதும் ரத்து செய்யப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

SCROLL FOR NEXT