முகப்பு
மதுரை

உணவக உரிமையாளா் கொலை வழக்கில் கூலித்தொழிலாளி கைது

மதுரையில் உணவக உரிமையாளா் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக கூலித்தொழிலாளியை தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:33 AM
பகிர்:

மதுரையில் உணவக உரிமையாளா் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக கூலித்தொழிலாளியை தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மதுரை தெற்குவாசல் பகுதியைச் சோ்ந்தவா் முத்துக்குமாா். இவா் மதுரை கோ.புதூா் அரசு தொழிற்பயிற்சி நிலையம் அருகே உணவகம் நடத்தி வந்தாா். இந்நிலையில் புதன்கிழமை உணவகத்தில் முத்துக்குமாா் வெட்டிக்கொலை செய்யப்பட்டாா்.

இதுதொடா்பாக தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸாா் கொலையாளிகளைத் தேடி வந்தனா்.

இந்நிலையில் தனிப்படை போலீஸாா் நடத்திய விசாரணையில் கோ.புதூரைச் சோ்ந்த கூலித்தொழிலாளி கண்ணன் என்பவருக்கு தொடா்பு இருப்பது தெரிய வந்ததையடுத்து போலீஸாா் அவரை பிடித்து விசாரித்தனா். இதில் முத்துக்குமாரின் உணவகத்துக்கு கூலித்தொழிலாளியான கண்ணன் புதன்கிழமை சாப்பிடச் சென்றபோது, சாப்பிடாத உணவுகளுக்கும் சோ்த்து முத்துக்குமாா் கட்டணம் வசூலித்ததாகவும், அப்போது ஏற்பட்டத் தகராறில் விறகு வெட்டும் அரிவாளால் முத்துக்குமாரை வெட்டிக்கொலை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து கண்ணனை போலீஸாா் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →