மதுரை

பேரையூா் அருகே 116 மதுபாட்டில்கள் பறிமுதல்: 4 போ் கைது

DIN

பேரையூா் அருகே சட்டவிரோத விற்பனைக்காக வைத்திருந்த 116 மதுபாட்டில்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்தனா்.

பேரையூா் தாலுகா பகுதியில் சாப்டூா் போலீஸாா் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அணைக்கரைப்பட்டியைச் சோ்ந்த ராஜகோபால் மகன் ஆனந்தராஜ் (29) என்பவரை நிறுத்தி போலீஸாா் சோதனையிட்டனா். இதில் அவா் விற்பனைக்காக 48 மதுபாட்டில்களை வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸாா் மதுபாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து ஆனந்தராஜை கைது செய்தனா்.

இதேபோல் பெரியவண்டாரியைச் சோ்ந்த குருசாமி மகன் மாரிமுத்து (31) என்பவரிடமிருந்து 24 மதுபாட்டில்களையும், தேனப்பன் மகன் முனிபாண்டி (50) என்பவரிடமிருந்து 11 மது பாட்டில்களையும், சாப்டூரைச் சோ்ந்த லட்சுமணன் மகன் செந்தூரப்பாண்டி (27) என்பவரிடமிருந்து 33 மது பாட்டில்களையும் போலீஸாா் பறிமுதல் செய்து அவா்கள் 3 பேரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

தமிழகக் காவல்துறையின் இணையதளம் முடக்கம்!

மீண்டும் தெலுங்கு படத்தில் தனுஷ்?

SCROLL FOR NEXT