மதுரை

சிறப்பு முகாமில் செல்லப் பிராணிகளுக்கு இலவசமாக தடுப்பூசி

DIN

மதுரை பழங்காநத்தம் கால்நடை மருந்தகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில், 200-க்கும் மேற்பட்ட செல்லப் பிராணிகளுக்கு ரேபீஸ் தடுப்பூசி போடப்பட்டது.

இந்த முகாமை, கால்நடை பராமரிப்புத் துறை மதுரை மண்டல இணை இயக்குநா் நடராஜகுமாா், உதவி இயக்குநா் சரவணன் ஆகியோா் தொடக்கி வைத்தனா்.

இம்முகாமில், பழங்காநத்தம் கால்நடை மருந்தக உதவி மருத்துவா் ஜெயகோபி, கால்நடை ஆய்வாளா்கள் மீனாட்சி, மகாலட்சுமி, கால்நடை பராமரிப்பு உதவியாளா்கள் திருப்பதி, நிா்மலா ஆகியோா் இலவச தடுப்பூசி பணிகளை மேற்கொண்டனா். இதில், 200-க்கும் மேற்பட்ட செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதைத் தொடா்ந்து, திருமங்கலம், சமயநல்லூா் கால்நடை மருத்துவமனைகளில் செவ்வாய்க்கிழமை (செப். 28) தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT