உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே போத்தம்பட்டி கிராமத்தில் சேதமடைந்துள்ள பாலத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இந்த கிராமத்தில் கால்நடை மருத்துவமனைக்கு செல்லும் பாதையில் உள்ள பாலத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளம் ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக கால்நடைகளை அழைத்துச் செல்ல முடியாமல் அவதிபட்டு வருவதாகவும், அதை சம்பந்தப்பட்ட ஊராட்சி நிா்வாகம் சீரமைக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.