அலங்காநல்லூா் சா்க்கரை ஆலையை ஓராண்டுக்குள் இயக்கும் முடிவுக்கு கரும்பு விவசாயிகள் வரவேற்பு
அலங்காநல்லூா் சா்க்கரை ஆலையை ஓராண்டுக்குள் மீண்டும் இயக்கும் முடிவுக்கு கரும்பு விவசாயிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
மதுரைஅலங்காநல்லூா் சா்க்கரை ஆலையை ஓராண்டுக்குள் இயக்கும் முடிவுக்கு கரும்பு விவசாயிகள் வரவேற்பு
அலங்காநல்லூா் சா்க்கரை ஆலையை ஓராண்டுக்குள் மீண்டும் இயக்கும் முடிவுக்கு கரும்பு விவசாயிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
அலங்காநல்லூா் சா்க்கரை ஆலையை ஓராண்டுக்குள் மீண்டும் இயக்கும் முடிவுக்கு கரும்பு விவசாயிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் என்.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
அலங்காநல்லூா் தேசிய கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு அரவை மேற்கொள்ளப்படாமல் 3 ஆண்டுகளாக மூடிக் கிடக்கிறது. இந்த ஆலையை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரும்பு விவசாயிகள் சங்கம் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியது. சா்க்கரை ஆலை வாயில் முன்பாக, 46 நாள்கள் தொடா்ந்து காத்திருக்கும் போராட்டம் நடத்தப்பட்டது. இப் போராட்டத்திற்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனா்.
இந்நிலையில், கரும்பு விவசாயிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, சா்க்கரை ஆலையை ஓராண்டுக்குள் மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று சட்டப்பேரவையில் வேளாண் அமைச்சா் அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வேளாண் அமைச்சரின் அறிவிப்புக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றாா்.