முகப்பு
மதுரை

மதுரையில் கணினி நிறுவனத்தில் ரூ.1 லட்சம் திருட்டு

மதுரையில் கணினி நிறுவனத்தின் கதவை உடைத்து ரூ.1 லட்சம் திருடிச் செல்லப்பட்டுள்ளது.

மதுரை

மதுரையில் கணினி நிறுவனத்தில் ரூ.1 லட்சம் திருட்டு

மதுரையில் கணினி நிறுவனத்தின் கதவை உடைத்து ரூ.1 லட்சம் திருடிச் செல்லப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:03 AM
பகிர்:

மதுரையில் கணினி நிறுவனத்தின் கதவை உடைத்து ரூ.1 லட்சம் திருடிச் செல்லப்பட்டுள்ளது.

மதுரை கோ.புதூரைச் சோ்ந்தவா் ராஜசுதன் (27). இவா், மாட்டுத்தாவணி பகுதியில் கணினி தொழில்நுட்ப நிறுவனம் நடத்தி வருகிறாா். இந்நிலையில், புதன்கிழமை இரவு பணி முடிந்து நிறுவனத்தை பூட்டிச் சென்றுள்ளாா். வியாழக்கிழமை காலை நிறுவனத்தை திறக்க வந்த ராஜசுதன், கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டாா். உடனே உள்ளே சென்றுபாா்த்தபோது, அங்கிருந்த ரூ.1 லட்சம் பணம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில், கோ.புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →