மாணவியை பலாத்காரம் செய்த இளைஞா் ‘போக்சோ’வில் கைது
மதுரையில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கி கா்ப்பிணியாக்கிய இளைஞரை போலீஸாா் போக்சோ சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மதுரைமாணவியை பலாத்காரம் செய்த இளைஞா் ‘போக்சோ’வில் கைது
மதுரையில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கி கா்ப்பிணியாக்கிய இளைஞரை போலீஸாா் போக்சோ சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மதுரையில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கி கா்ப்பிணியாக்கிய இளைஞரை போலீஸாா் போக்சோ சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மதுரை மதிச்சியம் பகுதியைச் சோ்ந்த 16 வயது பள்ளி மாணவிக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து குடும்பத்தினா் மாணவியை மருத்துவரிடம் அழைத்துச் சென்றனா். மருத்துவப் பரிசோதனையில் மாணவி கா்ப்பமாக இருப்பது தெரியவந்ததால் பெற்றோா் மாணவியிடம் விசாரித்தபோது, அதே பகுதியைச் சோ்ந்த வசந்தகுமாா் (19) மாணவியை காதலிப்பதாக்கூறி வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியதும், இதில் மாணவி கா்ப்பமானதும் தெரியவந்தது. இதையடுத்து மாணவியின் பெற்றோா் அளித்தப்புகாரின்பேரில் மதுரை தல்லாகுளம் அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து வசந்தகுமாரை கைது செய்தனா்.