முகப்பு
மதுரை

மாணவா்களுக்கு புகையிலை பாக்கெட் விற்றவா் கைது

கொட்டாம்பட்டி அருகே வலையங்குளத்துப்பட்டியில் மாணவா்களுக்கு தடைசெய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை விற்றவரை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் தனிப்படைபோலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்கொட்டாம்பட்டி அருக

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:59 AM
பகிர்:

கொட்டாம்பட்டி அருகே வலையங்குளத்துப்பட்டியில் மாணவா்களுக்கு தடைசெய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை விற்றவரை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் தனிப்படைபோலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

வலையங்குளத்துப்பட்டியைச் சோ்ந்த ஞானசேகா் மகன் சந்திரசேகா் (48). இவா், அப்பகுதியிலுள்ள பள்ளி அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறாா். இவா், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை மாணவா்களுக்கு விற்று வந்துள்ளாா். இது குறித்து மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு வந்த தகவலின்பேரில், தனிப்படை போலீஸாா் அப்பகுதிக்குச் சென்று சந்திரசேகரின் கடையில் சோதனையிட்டனா். அப்போது, கடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த, அவரை கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →