முகப்பு
இந்தியா

3-வது முறையாக ஆட்சியை தக்கவைக்க அசாம் முதல்வரின் புதிய முயற்சி!

பாஜகவின் ஜன் ஆசிர்வாத யாத்திரை தொடர்பாக..

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 9:24 AM
முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா
பகிர்:

அசாமின் சோனித்பூர் மாவட்டத்தில் உள்ள தேகியாஜுலியில் இருந்து பாஜகவின் ஜன் ஆசிர்வாத யாத்திரையை முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தொடங்கிவைத்தார்.

வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியை தக்கவைக்கும் முயற்சியில் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஈடுபட்டுள்ளார். அந்தவகையில், பாஜகவின் ஜன் ஆசிர்வாத யாத்திரையை இன்று தொடங்கியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் மாநிலக் கட்சித் தலைவர் திலீப் சைகியா, மத்திய அமைச்சர் பபித்ரா மார்கெரிட்டா மற்றும் பிற உயர்மட்டத் தலைவர்களுடன், யாத்திரை ஊர்வலத்தில் பங்கேற்றார்.

சாலைகளின் இருபுறமும் மக்கள் வரிசையாக நின்று, பூக்கள் தூவி முதல்வரை வரவேற்றனர். யாத்திரையைத் தொடங்குவதற்கு முன்பு தேகியாஜுலியில் உள்ள குப்தேஸ்வரி கோயிலில் முதல்வர் வழிபாடு மேற்கொண்டார்.

யாத்திரை முதல் நாளில் சோனித்பூர் மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கும்.

மாநிலம் முழுவதும் மக்களுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்துவதற்காகக் கட்சி இந்த யாத்திரையைத் தொடங்கியுள்ளது என்று செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

மார்ச் 9 வரை தொடரும் இந்த யாத்திரையின் மூலம் தினமும் சுமார் ஒரு லட்சம் மக்களுடன் இணைவதே யாத்திரையின் நோக்கமாகும். இந்த யாத்திரையின் மூலம், மத்திய மற்றும் மாநில அரசுகளின் வளர்ச்சி மற்றும் நலத்திட்ட முயற்சிகள் மக்களிடம் எடுத்துச் செல்லப்படும். அதே நேரத்தில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்குக் குடிமக்களின் ஆசிர்வாதங்களையும் பெறுவோம் என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.

summary

Assam Chief Minister Himanta Biswa Sarma on Saturday launched the state BJP's 'Jan Ashirwad Yatra' from Dhekiajuli in Sonitpur district as the party seeks a third straight term in the upcoming Assembly polls.

முழு கட்டுரையைப் படிக்க →