ஜனநாயகக் கடமையாற்றினார் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா!
அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா வாக்களித்து ஜனநாயகக் கடமையை ஆற்றினார்.
அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா வாக்களித்து ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளார்.
722 வேட்பாளர்களின் தேர்தல் விதியைத் தீர்மானிக்கும், அஸ்ஸாமின் 126 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில், பாஜக தலைமையிலான அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா ஜலுக்பாரி தொகுதியில் தனது வாக்கினைப் பதிவு செய்துள்ளார்.
Advertisement
Advertisement
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மக்கள் தீர்க்கமான ஆணையை வழங்குவார்கள் என உறுதி தெரிவித்தார்.
கராள் புனியாதி தொடக்கப் பள்ளியில் வாக்களித்த முதல்வர் ஹிமந்தவுடன் அவரது மனைவி ரினிகி புயான் சர்மா மற்றும் அவரது குழந்தைகள் உடனிருந்தனர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியை வழிநடத்தும் முதல்வர் சர்மா 2001 ஆம் ஆண்டு முதல் பிரதிநிதித்துவப்படுத்தி வரும் ஜலுக்பாரி தொகுதியில் இம்முறை போட்டியிடுகிறார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, மாநிலத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க முயன்று வருகிறது.
வாக்களிப்பதற்கு முன்னதாக, அவர் காமாக்யா தேவி மற்றும் தௌல் கோவிந்தா ஆகிய கோயில்களுக்குச் சென்று சிறப்புப் பிரார்த்தனை மேற்கொண்டார்.
வாக்களித்துப்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
வாக்காளராக எனது கடமையை நான் நிறைவேற்றிவிட்டேன். அடுத்த ஐந்து ஆண்டுகளில் தொடர் வளர்ச்சியை உறுதி செய்வதற்காக, அனைவரும் தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும்.
மக்கள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஒரு தீர்க்கமான மக்கள் ஆணையை வழங்குவார்கள். மாநிலத்தின் பல பகுதிகளில் காலையில் பெய்த மழை ஓய்ந்து வானம் தெளிவடைந்திருப்பதால், இம்முறை வாக்களிக்கும் மக்களின் எண்ணிக்கை சிறப்பாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
Assam Chief Minister Himanta Biswa Sarma cast his vote for the Assembly polls on Thursday and asserted that people will give a decisive mandate to the BJP-led NDA.