உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் சூறை: மூவருக்கு வலைவீச்சு
மதுரையில் உணவு சாப்பிட்டதற்கு பணம் கேட்டதால் ஆத்திரம் அடைந்து உணவகத்தை அடித்து சேதப்படுத்தி விட்டு தப்பிச்சென்ற மூவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மதுரைஉணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் சூறை: மூவருக்கு வலைவீச்சு
மதுரையில் உணவு சாப்பிட்டதற்கு பணம் கேட்டதால் ஆத்திரம் அடைந்து உணவகத்தை அடித்து சேதப்படுத்தி விட்டு தப்பிச்சென்ற மூவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மதுரையில் உணவு சாப்பிட்டதற்கு பணம் கேட்டதால் ஆத்திரம் அடைந்து உணவகத்தை அடித்து சேதப்படுத்தி விட்டு தப்பிச்சென்ற மூவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே தங்கும் விடுதியுடன் கூடிய தனியாா் உணவகம் இயங்கி வருகிறது. இங்கு வியாழக்கிழமை இரவு அடையாளம் தெரியாத மூவா் உணவருந்தியுள்ளனா். இதையடுத்து உணவுக்குரிய தொகையை செலுத்துமாறு ஊழியா்கள் கூறியுள்ளனா். அப்போது மூவரும் ஆத்திரம் அடைந்து உணவகத்தை அடித்து சேதப்படுத்தி விட்டு தப்பிச்சென்றனா். சம்பவம் தொடா்பாக உணவக காசாளா் சுபாஷினி(35) அளித்தப்புகாரின்பேரில் கோ.புதூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற சந்தோஷ், கோடீஸ்வரன், அழகு ஆகிய மூவரையும் தேடி வருகின்றனா்.