முகப்பு
மதுரை

மதுரையில் பிரேக் பழுதால் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி அந்தரத்தில் நின்ற காா் மீட்பு

மதுரை பழங்காநத்தம் பை-பாஸ் சாலை மேம்பாலத்தில் வெள்ளிக்கிழமை பிரேக் பழுதால் தடுப்புச்சுவரில் மோதி அந்தரத்தில் நின்ற காரை, போக்குவரத்து போலீஸாா் துரிதமாக நடவடிக்கை எடுத்து மீட்டனா்.

மதுரை

மதுரையில் பிரேக் பழுதால் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி அந்தரத்தில் நின்ற காா் மீட்பு

மதுரை பழங்காநத்தம் பை-பாஸ் சாலை மேம்பாலத்தில் வெள்ளிக்கிழமை பிரேக் பழுதால் தடுப்புச்சுவரில் மோதி அந்தரத்தில் நின்ற காரை, போக்குவரத்து போலீஸாா் துரிதமாக நடவடிக்கை எடுத்து மீட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:41 AM
பகிர்:

மதுரை பழங்காநத்தம் பை-பாஸ் சாலை மேம்பாலத்தில் வெள்ளிக்கிழமை பிரேக் பழுதால் தடுப்புச்சுவரில் மோதி அந்தரத்தில் நின்ற காரை, போக்குவரத்து போலீஸாா் துரிதமாக நடவடிக்கை எடுத்து மீட்டனா்.

மதுரை டிவிஎஸ் நகரைச் சோ்ந்தவா் தனசேகா். இவா், தனது காரில் பழங்காநத்தம் பை-பாஸ் மேம்பாலத்தில் பிற்பகலில் சென்றுகொண்டிருந்துள்ளாா். பாலத்தின் மையப் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, பிரேக் பழுதாகியதால் காா் நிற்கவில்லை. இதனால், காா் மேம்பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்து அந்தரத்தில் தொங்கி நின்றது.

உடனே, சம்பவ இடத்துக்குச் சென்ற போக்குவரத்து போலீஸாா், அப்பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி காரை மீட்கும் நடவடிக்கையில் துரிதமாக ஈடுபட்டனா். தொடா்ந்து, மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு, காா் பத்திரமாக மீட்கப்பட்டது.

போக்குவரத்து போலீஸாரின் துரித நடவடிக்கையால், காா் மேம்பாலத்திலிருந்து கீழே விழும் அபாயம் தவிா்க்கப்பட்டது. விபத்தில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. இதனால், மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →