முகப்பு
மதுரை

உரிய பாதுகாப்பின்றி தூய்மைப் பணி; மதுரை துணை மேயரின் முகநூல் பதிவால் சர்ச்சை

மதுரையில் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி தூய்மை பணியில் ஈடுபடுத்திய துணை மேயரின் முகநூல் பதிவால் சர்ச்சை உருவாகியுள்ளது.

Updated On : 26 ஜூலை 2022, 1:29 pm IST
பகிர்:

மதுரை:  மதுரையில் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி தூய்மை பணியில் ஈடுபடுத்திய துணை மேயரின் முகநூல் பதிவால் சர்ச்சை உருவாகியுள்ளது.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட துணை மேயர் நாகராஜனின் சொந்த வார்டு பகுதியான 80-வது வார்டு ராஜிவ்காந்தி தெருவில் மழைநீர் தொட்டி அடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் அடைப்பை நீக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். தூய்மைப் பணியில் ஈடுபடக்கூடிய பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணியில் ஈடுபடுத்துவது போன்ற புகைப்படத்தை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

இந்த பதிவு  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சி தூய்மை பணியாளர்களை பாதுகாப்பு உபகரணமின்றி ஈடுபடுத்தியதாக ஏற்கனவே மேயருக்கு தூய்மை பணியாளர்கள் ஆணையம் நோட்டிஸ் அனுப்பியுள்ள நிலையில், தற்போது துணை மேயரும் இது போன்ற சர்ச்சையான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments