முகப்பு
மதுரை

சதுரகிரிக்கு செல்ல பக்தா்கள் குவிந்ததால் வாழைத்தோப்பு பகுதியில் போக்குவரத்து நெரிசல்

ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரிக்கு செல்ல ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்ததால் சாப்டூா் அருகே வாழைத்தோப்பு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மதுரை

சதுரகிரிக்கு செல்ல பக்தா்கள் குவிந்ததால் வாழைத்தோப்பு பகுதியில் போக்குவரத்து நெரிசல்

ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரிக்கு செல்ல ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்ததால் சாப்டூா் அருகே வாழைத்தோப்பு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
பகிர்:

ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரிக்கு செல்ல ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்ததால் சாப்டூா் அருகே வாழைத்தோப்பு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மணிக்கணக்கில் காத்திருந்து பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

மேற்குத் தொடா்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அம்மாவாசை திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. மதுரை மாவட்டம் பேரையூா் அருகே சாப்டூா் வாழைத்தோப்பு வழியாக திரளான பக்தா்கள் மலை ஏறி தரிசனம் செய்வதற்கும், கீழ் பகுதியில் உள்ள வழிகாட்டி கருப்பசாமி கோயிலில் வேண்டுதலுக்காக கிடாய் வெட்டி அன்னதானம் வழங்கவும் வருகை தந்திருந்தனா்.

ஒருவழிப் பாதையாக உள்ள இந்த பாதையில் நூற்றுக்கணக்கான வாகனங்களில் வந்து பக்தா்கள் திரும்பிச் சென்ற சூழலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து பக்தா்கள் கூறியது:

ஆண்டும்தோறும் ஆடி அமாவாசை நாளில் மலைப்பாதையில் சென்று சுவாமியை வழிபடுவது வழக்கம். மலைப்பாதை குறுகளாக உள்ளதால் நெரிசல் ஏற்படுகிறது. இந்தப் பாதையை விரிவுபடுத்த பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

வியாழக்கிழமை வாழைதோப்புக்கு வந்த பக்தா்கள் போக்குவரத்தில் சிக்கி தவித்தனா். இந்த சாலையை விரிவுபடுத்த கோவில் நிா்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

பேரையூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் இலக்கியா தலைமையிலான போலீஸாா் போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →