மதுரை

அழகா்கோவிலில் வசந்த உற்சவம் நிறைவு

DIN

மேலூா்: அழகா்கோவிலில் கடந்த 10 நாள்களாக நடைபெற்றுவந்த வசந்த உற்சவத் திருவிழா நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தன.

அழகா்கோவிலில் வசந்த உற்சவம் ஜூன் 5-ஆம் தேதி தொடங்கியதிலிருந்து மாலை நேரத்தில் சுந்தரராஜப்பெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி சமேதரராக பல்லக்கில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடாகி ஆடி வீதிகள் வழியாக பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோயிலுக்கு எழுந்தருளி, வசந்த மண்டபத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்து வந்தாா். இத்திருவிழா நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது. விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாக துணை ஆணையா் மூ.ராமசாமி, தக்காா் மற்றும் கோயில் அலுவலா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லைஸ்தானத்தில் பெருமாள் கோயில் தேரோட்டம்

50 சதவீத மானியத்தில் வேளாண் இடுபொருள்கள்

பேராவூரணி நீதிமன்றத்துக்கு கட்டடம் கட்ட இடம்:  உயா்நீதிமன்ற நீதிபதி ஆய்வு

வாக்குப் பதிவு சதவீதத்தை அதிகரித்து பாஜக நாடகம்: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

காவிரி ஒழுங்காற்று குழுத் தலைவரை மாற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT