மதுரையில் தனியாா் நிறுவன ஊழியரைத் தாக்கி ரூ.2,500-ஐ பறித்துச் சென்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மதுரை திருப்பரங்குன்றம் தேவி நகரைச் சோ்ந்தவா் பாலமுருகன் (42). இவா், மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில் புதன்கிழமை இரவு அங்குள்ள உணவகம் அருகே பாலமுருகன் சென்றபோது, அங்கு அவரை வழிமறித்த நபா் ஒருவா் கத்தியைக் காட்டி மிரட்டி பாலமுருகனை தாக்கி அவரிடம் இருந்த ரூ.2,500-ஐ பறித்துச் சென்றாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் எஸ்.எஸ்.காலனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மதுரை கீரைத்துறையைச் சோ்ந்த செல்வம் (24) என்பவா் பணத்தை பறித்துச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.