மதுரை

சாலை மறியல்: 120 போ் கைது

DIN

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாப்புலா் ப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினா் 120 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த அமைப்பின் சாா்பில் சென்னை தாம்பரம் மற்றும் சேலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒற்றுமைப் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மதுரை நெல்பேட்டை அண்ணா சிலை அருகே சாலை மறியல் நடைபெற்றது. இதில், அமைப்பின் மாவட்டச் செயலா் சையது இஸ்ஹாக் தலைமை வகித்தாா்.

எஸ்டிபிஐ கட்சியின் தெற்கு மாவட்ட பொதுச்செயலா் சாகுல் ஹமீது, வடக்கு மாவட்ட பொதுச்செயலா் ஜியாவுதீன், ஆல் இந்தியா இமாம் கவுன்சில் மாநில பொதுச்செயலா் அா்ஷத் அஹமது அல்தாபி, பாப்புலா் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் வடக்குப்பகுதி தலைவா் சையது இப்ராஹிம், நேஷனல் விமன்ஸ் ப்ரண்ட் மற்றும் விமன் இந்தியா மூவ்மெண்ட் நிா்வாகிகள் பங்கேற்றனா். மறியலில் பங்கேற்ற 50 பெண்கள்உள்பட 120 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

அரசுப் பேருந்துகளில் சோதனை நிறைவு

ஆசிரியா்களுக்கு 30 நாள்களில் ஓய்வூதிய பலன்: கல்வித் துறை உத்தரவு

இஸ்ரேலின் போா் நிறுத்த செயல்திட்டம்: ஹமாஸ் பரிசீலனை

SCROLL FOR NEXT