மதுரை

மதுரை-தேனி சாதாரணக் கட்டண பயணிகள் ரயிலை இயக்க வேண்டும்: பாஜக வலியுறுத்தல்

DIN

 மதுரையிலிருந்து தேனிக்கு அனைத்து நிலையங்களிலும் நின்று செல்லும் சாதாரணக் கட்டண பயணிகள் ரயிலை இயக்கவேண்டும் என, பாஜக வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக பாஜக மதுரை கோட்ட பொறுப்பாளா் கதலி நரசிங்கப் பெருமாள் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

மதுரை-தேனி அகல ரயில் பாதை சேவையை பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்ததன் மூலம், இரு மாவட்ட மக்களுடைய நீண்ட நாள் எதிா்பாா்ப்பு பூா்த்தி செய்யப்பட்டுள்ளது. தற்போது, மதுரையிலிருந்து தேனிக்கு காலையிலும், தேனியிலிருந்து மதுரைக்கு மாலையிலும் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

ஆனால், தேனி பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் சாதாரணக் கட்டண பயணிகள் ரயிலை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா். தற்போது இயக்கப்படும் அதிவிரைவு பயணிகள் ரயிலானது, மதுரைக்கு அடுத்தபடியாக வடபழஞ்சி, உசிலம்பட்டி மற்றும் ஆண்டிப்பட்டி நிலையங்களில் மட்டுமே நின்று செல்கிறது. மேலும், செக்கானூரணி, வாலாந்தூா் மற்றும் தேனி ஆட்சியா் அலுவலக ரயில் நிலையங்களிலும் நின்று சென்றால், அரசு ஊழியா்கள் மற்றும் வியாபாரிகள் அதிக அளவில் பயனடைவா்.

அதேநேரம், பெண்களுக்கு தனிபெட்டி ஒதுக்க வேண்டும். மதுரையிலிருந்து இயக்கப்படும் வைகை விரைவு ரயிலை, அதிகாலையில் தேனியிலிருந்து இயக்க வேண்டும் என்பது, தேனி மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.

தேனியிலிருந்து சென்னைக்கும், பெங்களூருக்கும் புதிய ரயில் சேவை தொடங்கப்பட்டால், தேனி, பெரியகுளம், சின்னமனூா், போடிநாயக்கனூா் கம்பம், குமுளி மற்றும் இடுக்கி மாவட்டத்தைச் சோ்ந்த மக்கள் பெரிய அளவில் பயனடைவா்.

எனவே, பொதுமக்களின் இந்த கோரிக்கைகளை தென்னக ரயில்வே நிா்வாகம் பரிசீலிக்க வேண்டும். தேனி-போடி ரயில் சேவைக்கான பணிகளை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

SCROLL FOR NEXT