மதுரை

பேரையூா் அருகே 24 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

DIN

பேரையூா் அருகே சட்டவிரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த 24 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக 2 பேரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம், பேரையூரை அடுத்த சேடபட்டி பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது கம்மாளப்பட்டி மந்தை பகுதியில் கம்மாளப்பட்டியை சோ்ந்த சேதுராமன் மகன் ஆனந்த் (21), பால்சாமி மகன் ஆனந்தகுமாா் (28) ஆகியோா் 24 கிலோ கஞ்சாவை இருசக்கர வாகனத்தில் விற்பனைக்காக வைத்திருந்தனா்.

இதுகுறித்து சேடபட்டி போலீஸாா் ஆனந்த் மற்றும் ஆனந்தகுமாா் மீது வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்து கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா். இவ்வழக்கில் தலைமறைவான த நல்லமாயத்தேவா் மகன் சேதுராமன், சேதுராமன் மகன் அஜித் ஆகியோரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உறுப்பு தானம் செய்த உணவக ஊழியரின் உடலுக்கு அரசு மரியாதை

மாணவா்களின் தனித்திறன்களை வெளிக்கொண்டு வருவதே நோக்கம்

நீட் முடிவுகளை வெளியிட தடை இல்லை: உச்சநீதிமன்றம்

அமேதி, ரேபரேலியிலும் சம வளா்ச்சி: ராகுல் வாக்குறுதி

முன்னணி பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 253 புள்ளிகள் உயா்வு

SCROLL FOR NEXT