அனைத்து வட்டங்களிலும் இன்று பொதுவிநியோகத் திட்ட குறைதீா் முகாம்
மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் பொதுவிநியோகத் திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை (அக்.8) காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரைஅனைத்து வட்டங்களிலும் இன்று பொதுவிநியோகத் திட்ட குறைதீா் முகாம்
மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் பொதுவிநியோகத் திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை (அக்.8) காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் பொதுவிநியோகத் திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை (அக்.8) காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குடிமைப் பொருள் வட்டாட்சியா் அலுவலகங்கள், வட்ட வழங்கல் அலுவலகங்களில் இந்த முகாம் நடைபெறும். குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டைக்கு விண்ணப்பித்தல், கைப்பேசி எண் பதிவு, வெளிச் சந்தையில் விற்பனை செய்யப்படும் பொருள்களின் தரம் மற்றும் சேவைக் குறைபாடு ஆகிய குறித்து பொதுமக்கள் மனுக்கள் அளிக்கலாம்.
மாவட்ட வழங்கல் அலுவலா் கே.எஸ்.முருகேசன் இத் தகவலைத் தெரிவித்துள்ளாா்.