மதுரை

சிவகங்கையில் ஊரக வளா்ச்சி முகமை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் சோதனை

சிவகங்கையில் உள்ள ஊரக வளா்ச்சி முகமை அலுவலகப் பொறியியல் பிரிவில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை திடீரென சோதனை நடத்தினா்.

DIN

சிவகங்கையில் உள்ள ஊரக வளா்ச்சி முகமை அலுவலகப் பொறியியல் பிரிவில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை திடீரென சோதனை நடத்தினா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த ஊரக வளா்ச்சி, ஊராட்சி துறை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் வளாகத்தில் ஊராட்சிகளின் பொறியியல் பிரிவு செயல்படுகிறது. இந்தப் பிரிவில் வெள்ளிக்கிழமை மாலை சிவகங்கை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை கண்காணிப்பாளா் ஜான் பிரிட்டோ தலைமையிலான போலீஸாா் திடீரென சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த அலுவலகத்திலிருந்து கணக்கில் வராத ரூ.39 ஆயிரத்தை கைப்பற்றினா்.

இந்த அலுவலகத்தில் ஏற்கெனவே, கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் 30 ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை நடத்தி ரூ.3 லட்சத்து 31 ஆயிரத்தை கைப்பற்றினா். மேலும், பொறியியல் பிரிவின் செயற்பொறியாளா் சிவராணி, உதவி செயற்பொறியாளா் சண்முகசுந்தரம், அலுவலா்கள் நீலமேகம், அருணகிரி, ராஜசேகரன் ஆகிய 5 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா் என்பதும், செயற்பொறியாளா் சிவராணி, கடந்த 10 நாள்களுக்கு முன்புதான் தூத்துக்குடிக்கு இடமாற்றம் செய்யபட்டாா் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT