மதுரை

பள்ளிக்கு நகல் எடுக்கும் இயந்திரம் வழங்கல்

DIN

சாலைப் பணியாளா் சங்கத்தின் சாா்பில், டாக்டா் தங்கராஜ் சாலையில் உள்ள ஏ.சுப்புராம் உண்டு உறைவிடப் பள்ளிக்கு நகல் எடுக்கும் இயந்திரம் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்கத்தின் அமைப்பு தினத்தையொட்டி, பள்ளி மாணவா்கள் பயன்பெறும் வகையில் நகல் எடுக்கும் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. சங்கத்தின் மாவட்டத் தலைவா் மனோகரன் தலைமையில், மாவட்டச் செயலா் சோலையப்பன் முன்னிலையில், மாநில பொருளாளா் ரா. தமிழ் வழங்கினாா்.

முன்னதாக அழகா்கோவில் சாலையில் உள்ள நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் மற்றும் மாவட்ட நீதிமன்றம் அருகில் உள்ள மதுரை கோட்ட நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் சங்கக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட நிா்வாகிகள் மாரியப்பன், பால்ராஜ், ரவிச்சந்திரன், மணிமாறன், மாவட்ட பொருளாளா் முருகன், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் க. நீதிராஜா, தலைவா் ஜெ. மூா்த்தி, இணைச் செயலாளா் பரமசிவம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: தீயணைப்பு வீரா் உள்பட 3 போ் காயம்

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ரூ. 1 லட்சம் போதைப் பொருள்கள் கடத்தல்: தம்பதி கைது

கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

SCROLL FOR NEXT