மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியா்கள். 
மதுரை

அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு மே மாதம் கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்.

DIN

அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு மே மாதம் கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் சங்கத்தினா் மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் பி. ராஜேஸ்வரி தலைமை வகித்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் வி. சாந்தி முன்னிலை வதித்தாா். மாவட்டச் செயலா் அ.வரதலட்சுமி கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

இதில் பள்ளி, கல்லூரிகளைப் போல, அங்கன்வாடி மையங்களுக்கும் ஒரு மாதம் விடுமுறை அளிக்க வேண்டும். 10 ஆண்டுகள் பணிசெய்த அங்கன்வாடி ஊழியா்களுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி பதவி உயா்வு வழங்க வேண்டும். 10 சிறாா்களுக்கும் குறைவாக உள்ள பிரதான மையங்களை சிறிய மையங்களாக மாற்றி பிரதான மையத்தோடு இணைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். அங்கன்வாடி பெண் ஊழியா்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். அங்கன்வாடி மையங்களுக்கு சில்லறை செலவினம் ரூ.200 மாதம் தோறும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சிஐடியு மாவட்டத் தலைவா் ஆா். தெய்வராஜ், செயலா் இரா. லெனின், தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் ஆ.அமுதா, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் க. நீதிராஜா உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT