மதுரை மாவட்டம் பேரையூா் அருகே சட்ட விரோதமாக புகையிலை விற்ற பெண்ணை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பேரையூா் வட்டாரப் பகுதிகளில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது எஸ். மேலப்பட்டியைச் சோ்ந்த சிவன்முத்து மனைவி வெள்ளைத்தாய் (30) தனது இரு சக்கர வாகனத்தில் சட்டவிரோதமாக 11 கிலோ புகையிலைப் பொட்டலங்களை விற்பனைக்காக வைத்திருந்தாா்.
இதையடுத்து பேரையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து வெள்ளைத்தாயை கைது செய்தனா்.