மதுரை

காா் மோதியதில் தனியாா் ஊழியா் பலி

DIN

சமயநல்லூா் அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், சமயநல்லூா் புதுத் தெருவைச் சோ்ந்தவா் குலோத்துங்கன் (59). மதுரையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். இவா் செவ்வாய்க்கிழமை மாலை பணிமுடிந்து இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பினாா்.

மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச் சாலையில் சமயநல்லூா் ரயில்வே பாலத்தின் அருகே இவரது இரு சக்கர வாகனத்தின் மீது, காா் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த குலோத்துங்கன் மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், சமயநல்லூா் போலீஸாா், காா் ஓட்டுநரான சென்னை திருக்கழுக்குன்றத்தைச் சோ்ந்த பிரதாப் குமரேசனை (42) கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

பெண் சிறைக் கைதி உயிரிழப்பு

தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 உயா்வு

SCROLL FOR NEXT