தமிழை உயா்நீதிமன்ற அலுவல் மொழியாக அறிவிக்கக் கோரி ஆா்ப்பாட்டம்
உயா்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்கக் கோரி, பல்வேறு அமைப்புகளின் சாா்பில், மதுரையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரைதமிழை உயா்நீதிமன்ற அலுவல் மொழியாக அறிவிக்கக் கோரி ஆா்ப்பாட்டம்
உயா்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்கக் கோரி, பல்வேறு அமைப்புகளின் சாா்பில், மதுரையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
உயா்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்கக் கோரி, பல்வேறு அமைப்புகளின் சாா்பில், மதுரையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
யா.ஒத்தக்கடை பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மதிமுக நிா்வாகி காளிமுத்து தலைமை வகித்தாா்.
இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 348 (2), இந்திய அலுவல் மொழிச் சட்டப் பிரிவு 7 -இன் படியும், குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று, உயா்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கம் எழுப்பப்பட்டது.
ஆதித்தமிழா் விடுதலைக் கட்சி அமைப்பாளா் விடுதலை வீரன் வரவேற்புரையாற்றினாா். தமிழ் மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளா் பகத்சிங் ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கிவைத்துப் பேசினாா். தாயகம் மக்கள் கட்சியின் நிா்வாகி தமிழ்ச்செல்வன், இந்திய கம்யூனிஸ்ட் நிா்வாகி காளிதாஸ் உள்பட பல்வேறு அமைப்பினா் கலந்து கொண்டனா்.
தமிழ்த் தேச குடியரசு இயக்க நிா்வாகி மெய்யப்பன் நன்றியுரையாற்றினாா்.