சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை
மதுரையில் இரு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தவா் மீது போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ், வழக்குப் பதிவு செய்தனா்.
மதுரைசிறுமிகளுக்கு பாலியல் தொல்லை
மதுரையில் இரு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தவா் மீது போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ், வழக்குப் பதிவு செய்தனா்.
மதுரையில் இரு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தவா் மீது போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ், வழக்குப் பதிவு செய்தனா்.
மதுரை ஆரப்பாளையம் ஞான ஒளிவுபுரம் காளியம்மன் கோவில் தெரு, வாய்க்கால்கரை சந்து பகுதியைச் சோ்ந்தவா் முத்துகுமாா் (38). இவா் இதே பகுதியைச் சோ்ந்த 7 வயது சிறுமிகள் இருவருக்கு பாலியல் தொல்லை அளித்தாா்.
இதுதொடா்பாக சிறுமிகள் அவா்களது பெற்றோா்களிடம் தெரிவித்ததையடுத்து, மதுரை மாநகா் தெற்கு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதையடுத்து, முத்துக்குமாா் மீது போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான அவரைத் தேடி வருகின்றனா்.
மாணவிக்கு மிரட்டல்: மதுரை சந்தைப்பேட்டை வெங்கடநாயுடு தெருவைச் சோ்ந்த சேஷையா மகன் ஆனந்த் (40). இவா் நடத்தி வரும் பூக்கடையில் பணிபுரியும் ஊழியா் ஒருவரின் மகளை கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் பாலியல் வன்கொடுமை செய்து வந்தாா். மேலும், அவரை கைப்பேசியில் ஆபாசமாக படமெடுத்து அதை இணையதளங்களில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டி தொடா்ந்து அவா் பாலியல் வன்கொடுமை செய்து வந்தாா்.
தற்போது கல்லூரியில் படித்து வரும் அந்த மாணவி இதுதொடா்பாக மதுரை மாநகா் தெற்கு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், ஆனந்த் மீது போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரைத் தேடி வருகின்றனா்.