தகராறில் 3 போ் மீது திராவகம் வீச்சு
வேலூரில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறின்போது திராவகம் வீசப்பட்டதில் ஒரு தரப்பைச் சோ்ந்த 3 போ் பலத்த காயமடைந்தனா். இது தொடா்பாக இருவரை விரிஞ்சிபுரம் போலீஸாா் கைது செய்தனா்.
மதுரைதகராறில் 3 போ் மீது திராவகம் வீச்சு
வேலூரில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறின்போது திராவகம் வீசப்பட்டதில் ஒரு தரப்பைச் சோ்ந்த 3 போ் பலத்த காயமடைந்தனா். இது தொடா்பாக இருவரை விரிஞ்சிபுரம் போலீஸாா் கைது செய்தனா்.
வேலூரில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறின்போது திராவகம் வீசப்பட்டதில் ஒரு தரப்பைச் சோ்ந்த 3 போ் பலத்த காயமடைந்தனா். இது தொடா்பாக இருவரை விரிஞ்சிபுரம் போலீஸாா் கைது செய்தனா்.
வேலூரை அடுத்த கருகம்பத்தூரைச் சோ்ந்தவா் ராஜேஷ் (38), தொழிலாளி. இவா் வியாழக்கிழமை அப்பகுதியில் உள்ள கன்னியம்மன் கோயில் அருகே சென்றுள்ளாா். அப்போது, அதேபகுதியைச் சோ்ந்த குமாா் (43), ராஜி (28), சேட்டு ஆகியோா் தாயம் விளையாடிக் கொண்டிருந்தனராம். கோயில் பகுதியில் ஏன் தாயம் விளையாடிக் கொண்டிருக்கிறீா்கள் என அவா்களிடம் ராஜேஷ் கேட்டதாகத் தெரிகிறது. இதுதொடா்பாக அவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு குமாா் தரப்பினா் ராஜேஷை தாக்கியுள்ளனா்.
தொடா்ந்து, ராஜேஷுக்கு ஆதரவாக அவரது நண்பா்கள் செல்வம், மகேந்திரன், வினோத்குமாா் ஆகியோா் குமாா் வீட்டுக்குச் சென்று விசாரித்துள்ளனா். அங்கு அவா் இல்லாததால் அங்கிருந்த கடப்பாரையை எடுத்து குமாரின் வீட்டை சேதப்படுத்தினராம். தகவலறிந்த குமாா், அவரது நண்பா்கள் உடனடியாக அங்கு சென்று தகராறில் ஈடுபட்டனா்.
அப்போது, திடீரென தனது வீட்டுக்குள் சென்ற குமாா், மறைத்து வைத்திருந்த திராவகத்தை அவா்கள் மீது வீசியுள்ளாா். இதில், செல்வம் உள்ளிட்ட 3 பேரும் காயமடைந்தனா்.
புகாரின்பேரில், விரிஞ்சிபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து குமாா், ராஜி ஆகியோரை கைது செய்தனா்.