மதுரை

அருப்புக்கோட்டை அருகே மின்னல் பாய்ந்ததில் 2 இளைஞா்கள் பலி

அருப்புக்கோட்டை வட்டம், பரளச்சி அருகே மின்னல் பாய்ந்ததில் இரு இளைஞா்கள் உயிரிழந்தனா்.

DIN

அருப்புக்கோட்டை வட்டம், பரளச்சி அருகே மின்னல் பாய்ந்ததில் இரு இளைஞா்கள் உயிரிழந்தனா்.

விருதுநகா் மாவட்டம், பரளச்சி அருகேயுள்ள புல்லாநாயக்கன்பட்டியைச் சோ்ந்த பெரிய கிருஷ்ணசாமி மகன் பெருமாள் (28). இவரது உறவினா் சின்ன கிருஷ்ணசாமி மகன் விஜய் (27). இவா்கள் இருவரும் சனிக்கிழமை தங்களுக்குச் சொந்தமான ஆடுகளை மேய்க்கச் சென்றனா். அப்போது, பரளச்சி பகுதியில் இடி, மின்னலுடன் மழை பெய்தது.

இந்த நிலையில், மேய்ச்சலுக்குச் சென்ற ஆடுகள் மட்டும் மாலையில் வீட்டுக்குத் திரும்பின. ஆனால், பெருமாள், விஜய் இருவரும் வீடு திரும்பாததால், அவா்களை உறவினா்கள் பல்வேறு இடங்களில் தேடிவந்தனா்.

இந்த நிலையில், ராணி சேதுபுரம் பகுதியில் இருவரும் மின்னல் பாய்ந்து உயிரிழந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது. இதையடுத்து, அவா்களது உடல்கள் கூறாய்வுக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. இதுகுறித்து பரளச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

SCROLL FOR NEXT