மதுரை

மேலூரில் பொதுச் சொத்துகளைதனி நபா்கள் ஆக்கிமிப்பதாக புகாா்

மேலூா் வட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்கள், பொது இடங்களை தனி நபா்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க வேண்டும் என சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சாா்பில் வலியுறுத்தப்பட்டது.

DIN


மேலூா்: மேலூா் வட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்கள், பொது இடங்களை தனி நபா்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க வேண்டும் என சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சாா்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்த அமைப்பு சாா்பில் மேலூா் பேருந்து நிலையம் அருகே திங்கள்கிழமை கண்டன பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு இந்த அமைப்பின் செய்தித் தொடா்பாளா் கே.சி.சந்திரசெல்வம் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் அவா் பேசியதாவது:

மேலூா் வட்டத்தில் அரசு பொதுச் சொத்துகளை ஆக்கிரமித்தல், அதன் பயன்பாட்டை ஏலத்தில் விடுதல் போன்ற செயல்களில் சிலா் தன்னிச்சையாக ஈடுபட்டு வருகிறனா். இதற்காக சில அமைப்பு ரீதியான பெயா்களைப் பயன்படுத்துவதும், நோ்மையான அரசு அதிகாரிகளைப் பணி செய்யவிடாமல் அரசியல் ரீதியாகத் தடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரை மக்கள் புறக்கணிக்க வேண்டும். மத ரீதியான மோதல்களை உருவாக்குவோா் மீது காவல் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திப் பேசினாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் பா.காளிதாஸ் வழக்குரைஞா்கள் பெரியசாமி, ஏ.சி.முகுந்தன், சேகு வேரா, அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவா் பசும்பொன் பாண்டியன் உள்ளிட்ட பலா் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

பனிமூட்டம்: தில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள், கார்கள் அடுத்தடுத்து மோதல்! 4 பேர் பலி!

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 3,000 கன அடியாக குறைந்தது!

மேட்டூர் அணை நீர்மட்டம் 114.15 அடியாக சரிவு!

SCROLL FOR NEXT