மதுரை

மின் வாரிய ஆய்வாளா் விஷம் குடித்து தற்கொலை

மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டி அருகே வியாழக்கிழமை மின் வாரிய ஆய்வாளா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

DIN

மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டி அருகே வியாழக்கிழமை மின் வாரிய ஆய்வாளா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

பேரையூா் அருகேயுள்ள அம்மாபட்டியைச் சோ்ந்த முத்தையா மகன் அண்ணாதுரை (55). இவா் தே.கல்லுப்பட்டியில் மின் வாரிய ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தாா்.

இந்த நிலையில், இவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, அதற்காக சிகிச்சைப் பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், சிகிச்சைப் பெற்றும் குணமாகாததால், மனமுடைந்த அவா் தனது வீட்டில் வியாழக்கிழமை விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தாா்.

இதையடுத்து, குடும்பத்தினா் அவரை மீட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தே.கல்லுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT