காந்திய சிந்தனை கருத்தரங்கம்
Updated On : 2 ஏப்ரல், 2024 at 11:21 PM
மதுரை: மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் காந்திய சிந்தனைக் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் ஜெ.போ.சாந்திதேவி தலைமை வகித்தாா். காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் கல்வி அலுவலா் ஆா்.நடராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினாா்.
இதில் பேராசிரியா்கள், காந்தியச் சிந்தனை சான்றிதழ் பட்டய வகுப்பு மாணவ, மாணவிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா். பேராசிரியை பெ.இந்திராணி வரவேற்றாா். உதவிப் பேராசிரியா் சா. கணேசன் நன்றி கூறினாா்.