கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்
Updated On : 8 ஏப்ரல், 2024 at 8:53 PM
மதுரை, ஏப். 8: மதுரைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமை கல்லூரியின் வாரியச் செயலா் நடனகோபால் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். முதல்வா் ஜெ. சுரேஷ் முன்னிலை வகித்தாா். முதன்மையா் ம. முத்துக்குமாா், வேதியியல் துறைத் தலைவா் சேவியா் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
இதில் தனியாா் உரம் தயாரிப்பு நிறுவனம் கலந்து கொண்டு 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளைத் தோ்வு செய்து, பணி நியமன ஆணைகளை வழங்கியது.
Advertisement
இந்த முகாமில் கல்லூரி வேலை வாய்ப்புத் துறை ஒருங்கிணைப்பாளா்கள் வெங்கடேஸ்வரன், சரவணன், ராமச்சந்திரன், ராபா்ட், பேராசிரியா்கள் சாகுல் ஹமீது, சிவராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.