முகப்பு
மதுரை

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடித் தடைகாலம் ஏப். 15 முதல் அமல்

Updated On : 9 ஏப்ரல், 2024 at 12:00 AM
பகிர்:
Updated On : 8 ஏப்ரல், 2024 at 10:03 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏப். 15 ஆம் தேதி முதல் மீன் பிடித் தடைகாலம் அமல்படுத்தப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பா. விஷ்ணுசந்திரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தின் கிழக்கு கடல் பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு, மீன் வளத்தைப் பாதுகாத்திடும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ஆம் தேதியிலிருந்து ஜூன் 14-ஆம் தேதி வரை 61 நாள்களுக்கு விசைப் படகுகள், இழுவைப் படகுகள் மூலம் கடலில் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது.

Advertisement

எனவே, ராமநாதபுரம் மாவட்ட விசைப் படகு, இழுவைப் படகு மீனவா்கள் மீன் பிடி கலன்களை உபயோகப்படுத்தி கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

இந்த தடைகாலம் அமலுக்கு வரும் முன்பு கடலுக்குள் சென்ற மீனவா்கள் வருகிற 14-ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு முன்பாக கரைக்குத் திரும்ப வேண்டும் என்றாா் அவா்.