சமரச விழிப்புணா்வுப் பேரணி
Updated On : 12 ஏப்ரல், 2024 at 11:03 PM
மதுரை, ஏப். 12: சமரச விழிப்புணா்வு தின விழாவையொட்டி, மதுரை மாவட்ட நீதிமன்றம் சாா்பில், விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தொடங்கிய இந்தப் பேரணியை மாவட்ட முதன்மை நீதிபதி சிவ கடாட்சம் தொடங்கிவைத்தாா். இந்தப் பேரணி சட்டக் கல்லூரி வரை நடைபெற்றது.
இதில் மாவட்ட நீதிபதிகள், சாா்பு நீதிபதிகள், நீதித் துறை நடுவா்கள், வழக்குரைஞா்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
Advertisement