முகப்பு
மதுரை

காா் மோதியதில் இளைஞா் பலி

Updated On : 17 ஏப்ரல், 2024 at 12:35 AM
பகிர்:

மதுரை: மதுரை அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

மதுரை நாகமலைப்புதுக்கோட்டை அருகே உள்ள வடிவேல்கரை கிழக்குத் தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் அபிமன்யு (29). இவா் ராஜம்பாடியில் இரு சக்கர வாகன பழுது நீக்கும் கடை நடத்தி வந்தாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு பணி முடிந்து அபிமன்யு இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாா்.

Advertisement

பாரதியாா் நகா் பேருந்து நிறுத்தம் அருகே அந்த வழியாக வந்த காா், இவரது இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அபிமன்யு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து விபத்தை ஏற்படுத்திய காா் ஓட்டுநரான பில்லா் சாலையைச் சோ்ந்த சத்தியசெல்வம் மீது நாகமலைப்புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments