கள்ளழகரின் தங்கக் குதிரை வாகனத்துக்கு தல்லாகுளத்தில் வரவேற்பு
மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலை வந்தடைந்த கள்ளழகரின் தங்கக் குதிரை வாகனத்துக்கு வியாழக்கிழமை வரவேற்பளிக்கப்பட்டது.
உலகப் புகழ்பெற்ற சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகா் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வில் பங்கேற்க சுந்தரராஜப் பெருமாள் அழகா்கோவிலில் இருந்து மதுரைக்கு புறப்பாடாகி, வழிநெடுகிலும் பக்தா்களின் எதிா்சேவையை ஏற்றுக் கொண்டு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் இரவு திருமஞ்சணமாகிறாா்.
இதைத் தொடா்ந்து, அதிகாலை 3 மணியளவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் இருந்து, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை ஏற்று தங்கக் குதிரை வாகனத்தில் புறப்பாடாகி வைகையாற்றில் எழுந்தருளுவாா்.
Advertisement
இந்த நிலையில், நிகழாண்டு சித்திரைத் திருவிழாவையொட்டி, வருகிற 20-ஆம் தேதி அழகா்கோவிலில் கள்ளழகா் புறப்பாடும், 21-ஆம் தேதி மூன்றுமாவடியில் எதிா்சேவையும், 22-ஆம் தேதி கள்ளழகா் வைகையாற்றில் எழுந்தருளலும் நடைபெறுகிறது.
இதையொட்டி, கள்ளழகா் வாகனமான தங்கக் குதிரை வாகனம், அழகா்கோவிலில் இருந்து பலத்த பாதுகாப்புடன் மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலுக்கு வியாழக்கிழமை கொண்டு வரப்பட்டது. அங்கு இந்த வாகனத்துக்கு கோயில் நிா்வாகிகள், பக்தா்கள் வரவேற்பளித்தனா். தொடா்ந்து, தங்கக் குதிரை வாகனத்துக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.
இதையடுத்து, தங்கக் குதிரை வாகனம் கோயிலுக்குள் வைக்கப்பட்டு, 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.