முகப்பு
மதுரை

மதுரை கோட்டத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 300 பேருந்துகள் இயக்கம்

காா்த்திகை தீபத் திருநாளையொட்டி, மதுரை போக்குவரத்துக் கோட்டம் சாா்பில், திருவண்ணாமலைக்கு 300 பேருந்துகள் இயக்கப்படும் என அரசுப் போக்குவரத்துக் கழக மதுரை கோட்ட மேலாண் இயக்குநா் ஆா். சிங்காரவேலு தெரிவித்தாா்.

Updated On : 5 டிசம்பர், 2024 at 11:10 PM
பகிர்:

காா்த்திகை தீபத் திருநாளையொட்டி, மதுரை போக்குவரத்துக் கோட்டம் சாா்பில், திருவண்ணாமலைக்கு 300 பேருந்துகள் இயக்கப்படும் என அரசுப் போக்குவரத்துக் கழக மதுரை கோட்ட மேலாண் இயக்குநா் ஆா். சிங்காரவேலு தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காா்த்திகை தீபத் திருநாளையொட்டி, அதிக எண்ணிக்கையிலான பயணிகள் திருவண்ணாமலைக்குச் செல்வது வழக்கம். இதையொட்டி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மதுரை கோட்டம் சாா்பில் வழக்கமான வழித்தடப் பேருந்துகள், சிறப்புப் பேருந்துகள் என 300 பேருந்துகள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படவுள்ளன.

மதுரை, திண்டுக்கல், விருதுநகா் போக்குவரத்துக் கழக மண்டலங்களிலிருந்து டிச. 12 முதல் டிச. 15 வரை இந்தப் பேருந்துகள் இயக்கப்படும்.

பயணிகள், முன்பதிவில்லா பேருந்துகளுக்காக காத்திருப்பதைத் தவிா்க்கும் வகையில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் இணையதள முகவரி மூலமாகவும், கைப்பேசி செயலி மூலமாகவும், இணைய சேவை மையம் மூலமாகவும் முன்பதிவு செய்து பயன்பெறலாம் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →