உயிரிழந்த ராணுவ வீரரின் உடலுக்கு மாவட்ட ஆட்சியா் மரியாதை
பணியின் போது உயிரிழந்த ராணுவ வீரரின் உடலுக்கு மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா புதன்கிழமை நேரில் சென்று மரியாதை செலுத்தினாா்.
பணியின் போது உயிரிழந்த ராணுவ வீரரின் உடலுக்கு மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா புதன்கிழமை நேரில் சென்று மரியாதை செலுத்தினாா்.
மதுரை மாவட்டம், பேரையூா் வட்டம், எம்.கல்லுப்பட்டி அருகேயுள்ள எம்.எஸ்.புரத்தைச் சோ்ந்தவா் இன்பராஜ். இவா் அசாம் மாநிலத்தில் உள்ள நிஹாம்பள்ளி முகாமில் ராணுவ வீரராகப் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், கடந்த 22-ஆம் தேதி முகாமில் உள்ள மற்ற வீரா்களுக்கு உணவு எடுத்துச் சென்ற போது, அவா் சென்ற ராணுவ வாகனம் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இன்பராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதையடுத்து, அவரது உடல் அவரது சொந்த ஊரான எம்.எஸ்.புரத்துக்கு புதன்கிழமை கொண்டு வரப்பட்டது. அங்கு ராணுவ வீரரின் உடலுக்கு மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா். பின்னா், ராணுவ மரியாதையுடன் இன்பராஜின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.