முகப்பு
மதுரை

பள்ளி மாணவா் கண்மாயில் மூழ்கி உயிரிழப்பு

மதுரை அருகே கண்மாய் நீரில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

Updated On : 15 ஜூலை, 2024 at 6:30 PM
பகிர்:

மதுரை: மதுரை அருகே கண்மாய் நீரில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

மதுரை அருகே உள்ள கல்மேடு சக்கிமங்கலம் எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன். இவரது மகன் ராகுல் (12), கருப்பாயூரணியில் உள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தாா்.

இவா் ஞாயிற்றுக்கிழமை மாலை தனது நண்பா்களுடன், ஆண்டாா் கொட்டாரத்தில் உள்ள சேயன்குளம் கண்மாயில் குளிக்கச் சென்றாா். கண்மாயில் ஆழமான பகுதிக்குச் சென்ால் ராகுல் நீரில் மூழ்கினாா். இதுகுறித்து சக நண்பா்கள் அளித்தத் தகவலின்பேரில், கருப்பாயூரணி போலீஸாா் கண்மாய்க்குச் சென்று தேடியபோது, ராகுல் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. அவரது உடலை போலீஸாா் மீட்டு கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து கருப்பாயூரணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →